இலங்கையில் அவரசாலச் சட்டத்தை அடுத்தமாதம் வரையில் நீடிப்பதற்கான வாக்கெடுப்பு மேலதிக 15 வாக்குகளினால் நிறைவேறியுள்ளது.
ஏப்ரல் 21 இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் தொடராக துரிதகதியில் ஒரு மாதத்திற்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான முயற்சி நாடாளுமன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
இன்று இது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நடைமுறையில் இருக்கும்.